Friday, December 21, 2012

பூசை நேரங்களில்நாதசுரம் இசைக்கும் பண்கள்.


நாளும் திருக்கோயில்தனில் பூசை நேரங்களில்
நாதசுரம் இசைக்கும் பண்கள்.

 

காலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும் பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்ட பண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூர தீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்து பள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டு இசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும் பாடலாம்)

* காலை 4.00 - 6.00 பூபாளம், பெளளி, மலயமாருதம், வலசி, நாதநாமக்கிரியை, மாயாமாயகெளளை.
*
காலை 6.00 - 8.00 பிலகரி, கேதாரம், கெளளிபந்து, ஜகன்மோகினி, சுத்த தனயாசி.
*
காலை 8.00 - 10.00 தன்யாசி, அசாவேரி, சாவேரி, ஆரபி, தேவகாந்தாரி, தேவமனோகரி.
*
காலை 10.00 - 12.00 சுருட்டி, ஸ்ரீராகம், மத்தியமாவதி, மணிரங்கு, பிருந்தாவன சாரங்கா, தர்பார்.
*
பகல் 12.00 - 2.00 சுத்த பங்காளா, பூர்ண சந்திரிகா, கோகில திலகம், முகாரி, கெளடமல்லார்.
*
பகல் 2.00 - 4.00 நாட்டைக்குறிஞ்சி, உசேனி, ரவிச்சந்திரிகா, வர்த்தனி, அம்சாநந்தி, மந்தாரி.
*
மாலை 4.00 - 6.00 பூர்வி கல்யாணி, பந்துவராளி, வசந்தா, லலிதா, சரசுவதி, சீலாங்கி, கல்யாணி.
*
மாலை 6.00 - 8.00 சங்கராபரணம், பைரவி, கரகரப்பிரியா, பைரவம், நாராயணி, அம்சதுவனி. கெளளை.
*
இரவு 8.00 - 10.00 காம்போதி, சண்முகப்பிரியா, தோடி, நடபைரவி, அரிகாம்போதி, கமாசு, ரஞ்சனி.
*
இரவு 10.00 - 12.00 சிம்மேந்திர மத்யமம், சாருகேசி, கீரவாணி, ரீதி கெளளை, ஆனந்தபைரவி, நீலாம்பரி,
. . . . . . . . . . . . . . . .
யதுகலகாம்போதி.
*
இரவு 12.00 - 2.00 அடாணா, கேதார கெளளை, பியாகடை, சாமா, வராளி, தர்மவதி.
*
இரவு 2.00 - 4.00 ஏமாவதி, இந்தோளம், கர்நாடக தேவகாந்தாரி, தசாவளி, பாகேசுவரி, மோகனம்.

 

விழாக்கால வீதிஉலாக்களில் கோயில்
உள்ளும் வெளியிலும் இசைக்கவேண்டிய முறைகள்

 

* மண்டகப்படி தீபாராதனை.

1. தளிகை எடுத்துவர - மிஸ்ர மல்லாரி

2. தீபாரதனை நேரம் - தேவாரம், திருப்புகழ்.
*
புறப்பாடு

1. புறப்பாடு முன் - நாட்டை

2. புறப்பாடு ஆனதும் - யாகசாலைவரை - திருபுடைதாள மன்னியில் மற்ற தாளங்களில் மல்லரிகள்.
*
யாகசாலை தீபாராதனை நேரம் - ஒத்து, நாதசுரம், மிருதங்கம் மாத்திரம்.
*
யாகசாலை முதல் கோபுரவாசல் வரை - திருபுடைதாள மல்லரி.
*
கோபுரவாசல் முதல் தேரடிவரை - இதர மல்லரிகளும் வர்ணமும்.
*
தேரடியிலிருந்து தெற்குரதவீதி பாதி வரை - ராகம்.
*
தெற்குரதவீதி பாதி முதல் மேலரதவீதி பாதி வரை - ராகம், பல்லவி.
*
மேலைரதவீதி பாதி முதல் ஈசான்ய மூலை வரை - கிர்த்தனைகள்.
*
ஈசான்ய மூலை முதல் தேரடி வரை - தேவாரம், திருப்புகழ்.
*
தேரடி முதல் கோயில் பிரகாரம் வரை - நட்டுமுட்டு, சின்னமேளம் ( அல்லது முகவீணை )
*
கோயிலுக்குள் - துரிதகால திரிபுடைதாள மல்லரிகள்.
*
தட்டு சுற்று நேரம் - தேவாரம், திருப்புகழ்.
*
எதாஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது - எச்சரிக்கை.

 
விழாக்காலங்களில் கொடிஏற்றத்தினன்றும் கொடி இறக்கத்தினன்றும் நவசந்திகளில் இசைக்க வேண்டிய பண் முறைகள்

 
* பிரம சந்தி - மத்தி - பைரவி.
*
இந்தர சந்தி - கிழக்கு - குர்ஜரீ.
*
அக்கினி சந்தி - தென்கிழக்கு - நாட்டை.
*
இயம சந்தி - தெற்கு - தசாட்சரீ.
*
நிருதி சந்தி - தென்மேற்கு - குண்டக்கிரிய.
*
வருண சந்தி - மேற்கு - வராளி.
*
வாயு சந்தி - வடமேற்கு - வேளாவளி.
*
குபேர சந்தி - வடக்கு - ராமகலீ.
*
ஈசான சந்தி - வட கிழக்கு - பிலகரி.

 
வைணவக்கோயில்களில் தேவாரம் திருப்புகழ் இவைகளுக்கு பதிலாகஅஷ்டபதி, திருப்பாவை முதலியன இசைக்கலாம்.

 

 

 

 

 

இந்தப் பண்களைப் பொழுது அறிந்து இசைக்க வேண்டும் என்பர். இரவில் நட பைரவி, காலையில் கரகரப்ரியா, மாலையில் அரிகாம்போதி, முன்னிரவில் தோடி என்ற வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது. ஒவ்வொரு உணர்ச்சி வெளிப்படும் செயலுக்கும் ஒரு பண் என்ற முறை இருந்திருக்கிறது.

 

No comments:

Post a Comment